​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குருத்வாரா மீது தாக்குதல் எதிரொலி : ஆப்கானில் வசிக்கும் சீக்கியர்கள், இந்துக்களுக்கு "விசா" வழங்குவதில் முன்னுரிமை

Published : Jun 19, 2022 5:08 PM

குருத்வாரா மீது தாக்குதல் எதிரொலி : ஆப்கானில் வசிக்கும் சீக்கியர்கள், இந்துக்களுக்கு "விசா" வழங்குவதில் முன்னுரிமை

Jun 19, 2022 5:08 PM

ப்கானிஸ்தானில் குருத்வாரா மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அங்கு வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு முன்னுரிமை அளித்து இந்திய அரசாங்கம் விசா வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காபுலில் உள்ள குருத்வாரா மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் சீக்கியர் ஒருவர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஆப்கானில் இருந்து இந்தியா வர விண்ணப்பித்திருந்தவர்களில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் 100 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்திய அரசு இ-விசா வழங்கி உள்ளது.